Headlines

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் : சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளை ஒருவாரத்திற்கு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து…

Read More

இந்திய, பாகிஸ்தான் நெருக்கடி – இலங்கை தலையிடாது

இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்திற்குத் தகவல் அளித்து வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.  இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் மோதல்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலையிட மாட்டோம் என்றும் அமைச்சர் கூறினார்.  இந்திய-பாகிஸ்தான் நெருக்கடி தொடர்பாக நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளையில், அணிசேரா அணுகுமுறை…

Read More

புதிய பாப்பரசர் தெரிவு!

267வது பாப்பரசராக கர்தினால் ரொபேர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தெரிவாகினார். பாப்பரசர் லியோ XIV எனும் பெயரை அவர் தெரிவு செய்துள்ளார். கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று(07) ஆரம்பமானது. உலகளாவிய ரீதியில் இருக்கும் 252 கத்தோலிக்க கர்தினால்களில் 135 பேர் கூடி புதிய பாப்பரசர் ஒருவரை தெரிவு செய்யவதற்காக சிஸ்டைன் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆராதனையைத் தொடர்ந்து…

Read More

நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட அருச்சுனா எம். பி

சபை முதல்வர் பிமல் ரத்னாயக்கவின் உரைக்கு தொடர்ச்சியாக இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  சபை அமர்வுகளை குழப்பும் வகையில் குழப்பம் விளைவித்ததை அடுத்தே சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

Read More