
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் : சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளை ஒருவாரத்திற்கு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து…