இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் பயணமாக வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சுமார் 09 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைகிறது. இருவரும் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பில் விரிவாக கலந்துடையாட உள்ளனர்.
இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள காசா அமைதித் திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் நெதன்யாகு பிரதமருக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
இப்பிராந்தியத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த இந்தியா தனது ஆதரவைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது இந்த விஜயத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.

