சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி வழங்கப்பட ஏற்பாடுகளை செய்யுமாறு சென்னை ஹோட்டல்கள் சங்கம் இந்திய மத்திய அரசை கூறியுள்ளது.
அந்த சங்கம் இந்திய பிரதமருக்கு இது தொடர்பில் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது.
“நிலைமை இப்போது இன்னும் மோசமாகிவிட்டது. வணிக எல்பிஜி விநியோகஸ்தர்கள் தங்களிடம் கையிருப்பு இல்லை என்று கூறி, சிலிண்டர்களை வழங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். இதன் விளைவாக, பல உணவகங்கள் மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன . எனவே உடனடி நடவடிக்கை எடுத்து நிலைமையை சீர் செய்யுங்கள். “ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


