கொழும்பின் சில பகுதிகளில் இன்று போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் – பொலிஸ்

அமைதிக்கான நடைபயணம் இன்று கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறுவதால் விசேட போக்குவரத்து திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இன்று (28) காலை 11.00 மணி முதல் கீழ்கண்ட வீதிகளில் அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.

பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர மாவத்தை, பிரேமசிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ் ஹவுஸ் சந்தி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, மலர் வீதி, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, பேபுரூக் வீதி, ஸ்டேபில் வீதி மற்றும் கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகள். 

எனவே முடியுமானவரை போக்குவரத்து நெரிசலைத் தடுப்பதற்கு சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *