சர்வதேச அமைதிக்கான நடைபயணம் இன்றுடன் நிறைவுறுகிறது.
இன்று (28) நண்பகல் 12.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் நடைபயணம் ஆரம்பமாகி சுதந்திர சதுக்கத்தை அடையம்.
பின்னர் மாலை 4.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் விசேட அரச விழா நடைபெறவுள்ளது.
தொடர்ந்து சுதந்திர சதுக்கத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம் கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவு பெறவுள்ளது.

