இந்தியா – இஸ்ரேல் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.

தொடர்ந்து இஸ்ரேல் ஜனாதிபதியை சந்தித்து பேசிய மோடி, கல்வி, வேலைவாய்ப்பு, புத்தாக்கம், தொலைத்தொடர்பு போன்ற துறைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

இதையடுத்து, இந்தியா – இஸ்ரேல் இடையே விவசாயம், கல்வி, வணிகம், செயற்கை நுண்ணறிவு, மீன்வளம் போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முன்னிலையில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *