Headlines

8 நாட்களில் உலகளவில் டூரிஸ்ட் ஃபேமிலி செய்த வசூல்.

தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக அயோத்தி, நந்தன், கருடன் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்தது. இதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.  இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து சிம்ரன் முதல் முறையாக நடித்திருந்தார். மேலும் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ரமேஷ் திலக் என பலரும் நடித்திருந்தனர். மக்கள்…

Read More

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இந்தியா நாடுகள் தாக்குதல்!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் உள்ள ஒன்பது தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது மூன்று இடங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பதில் தாக்குதலை நாம் நடத்துவோம் என பாகிஸ்தான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை இந்திய நிர்வாக காஷ்மீருக்குள் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான…

Read More

குட் பேட் அக்லி.. மொத்த வசூல் விவரம் இதோ

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்தது. மேலும் திரையரங்கை தொடர்ந்து தற்போது OTT-யிலும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், குட் பேட்…

Read More

யாழ்.மாநகர முதல்வர் விடயம் – சுமந்திரன் ஒதுங்கி இருக்க வேண்டும் ; பஷீர் காக்கா கோரிக்கை

தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது. இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும் என மூத்த போராளி மனோகர் தெரிவித்தார். யாழ் மாநகர சபை மேயர் விவகாரம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,  உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமை…

Read More

நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட அருச்சுனா எம். பி

சபை முதல்வர் பிமல் ரத்னாயக்கவின் உரைக்கு தொடர்ச்சியாக இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  சபை அமர்வுகளை குழப்பும் வகையில் குழப்பம் விளைவித்ததை அடுத்தே சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

Read More

தேசிய மக்கள் சக்தியுடன் டீலுக்கு செல்வோர் துரோகிகள்

தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் டீல் பேசி ஆட்சி அமைப்போர் தமிழின துரோகிகள் என யாழ் . மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி, மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  தமிழர் பிரதேசங்களின் சில இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் கணிசமான ஆசனங்களையும் பெற்றுள்ளார்கள். அவர்களுடன் தமிழ் தேசிய கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சி அமைக்க கூடாது.  தேசிய மக்கள்…

Read More

புதிய பாப்பரசர் தெரிவு!

267வது பாப்பரசராக கர்தினால் ரொபேர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தெரிவாகினார். பாப்பரசர் லியோ XIV எனும் பெயரை அவர் தெரிவு செய்துள்ளார். கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று(07) ஆரம்பமானது. உலகளாவிய ரீதியில் இருக்கும் 252 கத்தோலிக்க கர்தினால்களில் 135 பேர் கூடி புதிய பாப்பரசர் ஒருவரை தெரிவு செய்யவதற்காக சிஸ்டைன் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆராதனையைத் தொடர்ந்து…

Read More

சுவிட்சர்லாந்தில் இமையாணன் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !

 வடமராட்சி இமையாணன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார் சுவிட்சர்லாந்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் அண்மைகாலமாக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ,  இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் , இமையாணன் பகுதியைச் சேர்ந்த தங்கராசா ஈஸ்வரன் வயது 49 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

Read More

12 பேருடன் பயணித்த பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்து – 6 பேர் பலி

இன்று காலை உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கிய நிலையில் அதிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் தரித்த 2 விமானப்படை வீரர்கள் மற்றும் 3 சிறப்பு படை வீரர்கள் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. உலங்கு வானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார். விமானத்தில்…

Read More