Headlines

யாழ் . மாநகரத்திற்கு விலை போகாதவரே முதல்வராக வரவேண்டும்

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வர கூடியவர் விலை போகாதவராக தமிழ் தேசிய பற்றுடன் செயற்பட கூடியவராக இருக்க வேண்டுமாம் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்  யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  யாழ் . மாநகர சபை முதல்வர் பதவி என்பது மிக முக்கியமானது.  ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட…

Read More

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் : சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளை ஒருவாரத்திற்கு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து…

Read More

8 நாட்களில் உலகளவில் டூரிஸ்ட் ஃபேமிலி செய்த வசூல்.

தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக அயோத்தி, நந்தன், கருடன் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்தது. இதை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.  இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து சிம்ரன் முதல் முறையாக நடித்திருந்தார். மேலும் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ரமேஷ் திலக் என பலரும் நடித்திருந்தனர். மக்கள்…

Read More

யாழ்.மாநகர முதல்வர் விடயம் – சுமந்திரன் ஒதுங்கி இருக்க வேண்டும் ; பஷீர் காக்கா கோரிக்கை

தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது. இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும் என மூத்த போராளி மனோகர் தெரிவித்தார். யாழ் மாநகர சபை மேயர் விவகாரம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,  உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமை…

Read More

புதிய பாப்பரசர் தெரிவு!

267வது பாப்பரசராக கர்தினால் ரொபேர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தெரிவாகினார். பாப்பரசர் லியோ XIV எனும் பெயரை அவர் தெரிவு செய்துள்ளார். கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று(07) ஆரம்பமானது. உலகளாவிய ரீதியில் இருக்கும் 252 கத்தோலிக்க கர்தினால்களில் 135 பேர் கூடி புதிய பாப்பரசர் ஒருவரை தெரிவு செய்யவதற்காக சிஸ்டைன் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆராதனையைத் தொடர்ந்து…

Read More

12 பேருடன் பயணித்த பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்து – 6 பேர் பலி

இன்று காலை உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கிய நிலையில் அதிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் தரித்த 2 விமானப்படை வீரர்கள் மற்றும் 3 சிறப்பு படை வீரர்கள் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. உலங்கு வானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார். விமானத்தில்…

Read More

இந்திய, பாகிஸ்தான் நெருக்கடி – இலங்கை தலையிடாது

இந்திய-பாகிஸ்தான் நெருக்கடியை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அரசாங்கத்திற்குத் தகவல் அளித்து வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.  இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் புவிசார் அரசியல் மோதல்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலையிட மாட்டோம் என்றும் அமைச்சர் கூறினார்.  இந்திய-பாகிஸ்தான் நெருக்கடி தொடர்பாக நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளையில், அணிசேரா அணுகுமுறை…

Read More

சுவிட்சர்லாந்தில் இமையாணன் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !

 வடமராட்சி இமையாணன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார் சுவிட்சர்லாந்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் அண்மைகாலமாக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ,  இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் , இமையாணன் பகுதியைச் சேர்ந்த தங்கராசா ஈஸ்வரன் வயது 49 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

Read More

குறைவடைந்துள்ள தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்தநிலையில், தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (08) குறைவடைந்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 983,946 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,710 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 277,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் 22…

Read More