Headlines

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவுக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில்…

Read More

தெதுறு ஓயாவில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்பு

நிக்கவெரட்டிய, கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்றதில் காணாமல் போனவர்களில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, மாயமான மேலும் இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

Read More

‘பொடி பெட்டி’யை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லொகு பெட்டியின் சகோதரர் பொடி பெட்டியை இலக்கு வைத்து அஹுங்கல்ல பகுதியில் நேற்று (16) இரவு 11.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பும்போதே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More