அஸ்வெசும முதியோருக்கான கொடுப்பனவு இன்று வைப்பீடு

அஸ்வெசும நலத்திட்டத்தின் முதியோருக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 பயனாளர்களுக்கு மொத்தமாக 3.087 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 72,525 பயனாளர்களுக்கு 362.6 மில்லியன் ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

பயனாளர்கள் தங்களது வங்கி கிளைகளுக்குச் சென்று இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பண்டிகை கால செலவுகளைக் கருத்திற்கொண்டு, இந்த நிதியைத் தாமதமின்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *