அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் அசௌகரியம்

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது…

Read More

ஹோர்மூஸ் நீரிணையை மீட்க பிரான்ஸ் நடவடிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முன்னோடியில்லாத இராணுவ நடவடிக்கையை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார். எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக மத்திய கிழக்கு கடற்பரப்பில் தனது கடற்படையின் பெரும் பகுதியை நிலைநிறுத்த பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது.  இது தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியிலான நடவடிக்க என பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்.  மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம்,…

Read More

நிலைமை மோசம் – சென்னை ஹோட்டல்கள் சங்கம் எச்சரிக்கை

சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி வழங்கப்பட ஏற்பாடுகளை செய்யுமாறு சென்னை ஹோட்டல்கள் சங்கம் இந்திய மத்திய அரசை கூறியுள்ளது. அந்த சங்கம் இந்திய பிரதமருக்கு இது தொடர்பில் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது. “நிலைமை இப்போது இன்னும் மோசமாகிவிட்டது. வணிக எல்பிஜி விநியோகஸ்தர்கள் தங்களிடம் கையிருப்பு இல்லை என்று கூறி, சிலிண்டர்களை வழங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். இதன் விளைவாக, பல உணவகங்கள் மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன . எனவே உடனடி நடவடிக்கை எடுத்து நிலைமையை சீர் செய்யுங்கள். “ என்று…

Read More

பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு- தொழிற்சங்க நடவடிக்கை காரணமா?

மின்சார சபை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் தடையை சரிசெய்ய சில மணி நேரம் எடுக்கும் என்று மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Read More

பஸ் கட்டண அதிகரிப்புக்கு கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எவ்வாறாயினும் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிரண்டா தெரிவித்துள்ளார்.

Read More

ஈரான் மீதான போர் விரைவில் முடியும் – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் தங்கள் போர் நோக்கங்களை அடைவதற்கு மிக நெருங்கியுள்ளதாகவும் மோதல் “மிக விரைவில்” முடிவுக்கு வரக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ஈரான் மீதான எமது நடவடிக்கை குறுகிய கால உல்லாசப் பயணம்.சில தீமைகளை” அகற்றுவதற்கு அவசியமான ஒரு “சிறிய உல்லாசப் பயணம்”. இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் “சிறிய இடைநிறுத்தத்தை” ஏற்படுத்தியிருந்தாலும், அது பெரியதல்ல, மேலும் பொருளாதாரம் விரைவாக உயர்ந்து “அதை ஊதிப் பெருக்கும். போர் ‘மிக விரைவாக’ முடிவடையும் ஈரான்…

Read More

மரணம், நெருப்பு ஈரான் மீது ஆட்சி செய்யும் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளை ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.  இந்நிலையில் ஹோர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு மற்றுமொரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹோர்மூஸ் ஜலசந்தியில் எண்ணெய் போக்குவரத்தை தடுக்கும் வகையில் ஈரான் எதையும் செய்தால், அவர்கள் இதுவரை தாக்கப்பட்டதைப் பார்க்கிலும் இருபது மடங்கு அதிகமாக அமெரிக்காவால் தாக்கப்படுவார்கள் என ட்ரம்ப் கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…

Read More

பண்டாரகம பகுதியில் விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு

பண்டாரகம, கெஸ்பேவ வீதியில் இன்று (10) காலை லொறி மோதியதில் 72 வயதுப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, குறித்த லொறியின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பண்டாரகமயிலிருந்து கெஸ்பேவ நோக்கிச் சென்ற லொறியானது, சேனபுரவில் வீதியின் எதிர்ப்பக்கமாகச் செல்ல முயன்றபோது குறித்த பெண் மீது மோதியுள்ளது. குறித்த லொறியானது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் உள்ள டயர் கடையின் முன் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த பெண்ணை முச்சக்கர வண்டியில் பண்டாரகம மாவட்ட…

Read More

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு

மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி அளவைக் குறைத்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகள் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாகவே பிரதான எண்ணெய் உற்பத்தி…

Read More