உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களையும், குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ளவர்களையும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்துகிறது.
வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள், அருகிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வெளியிடும் பாதுகாப்பு எச்சரிக்கைகளில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வப்போது ஏற்படும் வான்வெளி மூடல்கள் பயண இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும். மத்திய கிழக்குக்கு வெளியே உள்ளவை உட்பட, அமெரிக்கத் தூதரக அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.
ஈரானுக்கு ஆதரவான குழுக்கள், வெளிநாடுகளில் உள்ள மற்ற அமெரிக்க நலன்களையோ அல்லது அமெரிக்கா மற்றும்/அல்லது உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களையோ குறிவைக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

