அமெரிக்க படகின் மீது கியூபா பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு
கியூபாவின் வடக்குக் கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்க அதிவேகப் படகு மீது கரையோர பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படகில் இருந்த நால்வர் உயிரிழந்துள்ளதோடு, அறுவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பலில் இருந்தவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

