2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் (G.C.E A/L) செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தொழில்நுட்பவியல் பாடங்கள்
பொறிமுறைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைத் துறையைச் சார்ந்த பின்வரும் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் மார்ச் 09 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன:
நாட்டியம் (தேசிய மற்றும் பரதம்)
சங்கீதம் (கீழைத்தேய மற்றும் மேலைத்தேய)
நாடகமும் அரங்கியலும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்)
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் விரிவாகக் காணலாம்..

