ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் முன்அனுமதி இன்றி ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடுப்பதே இந்த தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும். எனினும், செனட் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில்:
செனட் சபைக்கு ஆதரவாக 47 வாக்குகளும் எதிராக 53 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததால் இத்தீர்மானம் தோல்வியடைந்தது.
அமெரிக்க செனட் சபையில் இந்தத் தீர்மானம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் படைகள் ஈரானின் தலைநகரான தெஹ்ரானை இலக்கு வைத்து புதிய வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

