தயாசிறி எம்.பியின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தம் – நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்துவதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைகால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த முறைப்பாடை ஆராய்ந்த பின்னரே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் செயல்படுவதில் தலையிடுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை .

Read More