கிளினிக் செயற்பாடுகளில் இருந்து விலகும் வைத்தியர்கள்…

 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 2) முதல் வைத்தியசாலைகளில் கிளினிக் நடவடிக்கைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளது.

வைத்தியர்களுக்கான சிறப்பு சேவையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்காததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இயங்கும் 50 கிளினிக்குகளும், நடமாடும் கிளினிக் அமைப்பும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் அத்தநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் ஆரம்ப சுகாதார சேவையை பராமரிக்க பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள சூழலில் இதுபோன்ற திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில்லை என்று வைத்தியர்கள் முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பொறுப்பான அமைச்சரோ அல்லது அரசாங்க அதிகாரிகளோ நேர்மறையான தலையீடு இல்லாததால், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை முழு அளவிலான வேலைநிறுத்தமாக மாறக்கூடும் சாத்தியங்கள் இருப்பதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *