ட்ரம்பின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை – ரணில்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளா்.

இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்துள்ளார்.

“ஒரு அரசாங்கத்தை மாற்றுவதாக இருந்தால் இந்த வன்முறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது எனவும் தெரிவித்துள்ளார்.

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாது. ஆனால், ஈரான் தனது கடல் எல்லை வழியாக வரும் ஏனைய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். 

உலகம் தனது விருப்பப்படி இயங்க வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்பார்க்கிறார். ஆனால், இதுபோன்ற ஆழமான பிரச்சினைகள் சிறிய நாடுகளுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *