இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை எந்தவிதக் கட்டணமுமின்றி நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2026 பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதால், இலங்கையிலிருந்து வெளியேறத் திட்டமிட்டிருந்த பல…

