அக்குரேகொட இரட்டைக்கொலை! துப்பாக்கிதாரியின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கும் சந்தேகநபர்கள்

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி  மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கு தங்குமிடம் வழங்கிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மெதகம, நன்னபுராவ – திவியப்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து மொனராகலை பொலிஸாரால் சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரியை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்திய…

Read More

கிளினிக் செயற்பாடுகளில் இருந்து விலகும் வைத்தியர்கள்…

 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 2) முதல் வைத்தியசாலைகளில் கிளினிக் நடவடிக்கைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. வைத்தியர்களுக்கான சிறப்பு சேவையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்காததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இயங்கும் 50 கிளினிக்குகளும், நடமாடும் கிளினிக் அமைப்பும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டில் ஆரம்ப…

Read More

இலங்கை மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தவணைகள் மற்றும் வட்டி விகிதங்களை 2028 முதல் செலுத்த இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவற்றை எந்த தடையும் இல்லாமல் திருப்பிச் செலுத்துவதற்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார். 2028 முதல் இலங்கை ஆண்டுதோறும் மூன்றரை முதல் நான்கு (3.5) பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கடன்கள் மற்றும் தவணைகளை செலுத்த வேண்டியுள்ளது. 2028 முதல் 2031…

Read More

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு லசித் மாலிங்க வெளியிட்டுள்ள முக்கிய பதிவு

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளரும் தற்போதைய அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளருமான லசித் மாலிங்க விசேட முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டில் இலங்கை அணி முதன்முதலில் உலகக் கிண்ணமொன்றை வென்றதன் முதல் சுற்றில் வெளியேறியதுடன் நான்கு உலகக் கிண்ண போட்டிகளில் இறுதி வரை முன்னேறி தோல்வியைத் தழுவியதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனது தாய் நாட்டு அணி…

Read More

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது: தேசிய சுதந்திர முன்னணி கடும் கண்டனம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டமையானது முற்றிலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனத் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.  கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான ஜெயந்த சமரவீர, இந்தத் தன்னிச்சையான கைது நடவடிக்கையைத் வன்மையாகக் கண்டித்தார்.  இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர்களையும் புலனாய்வு அதிகாரிகளையும்…

Read More

எந்தவொரு பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை – சாவகச்சேரி நகர சபையில் தீர்மானம்

ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தினை நேரடியாக அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையில், முன்மொழிப்பட்டுள்ள பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கவும், எந்தவொரு பயங்கரவாத் தடுப்புச் சட்டமும் தேவையில்லை என சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உபதவிசாளர் ஞா.கிஷோர் புதிய…

Read More

உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் (G.C.E A/L) செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தொழில்நுட்பவியல் பாடங்கள் பொறிமுறைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத் துறையைச் சார்ந்த பின்வரும் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் மார்ச் 09 ஆம் திகதி முதல் 16 ஆம்…

Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி முதல் பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக…

Read More

நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார் பொடி லெசி

இந்தியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பொடி லெசி எனப்படும் , ஜனித் மதுசங்க 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார். அதற்கமைய, அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளதுடன், அவர் இன்று நாட்டுக்குக் அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவித்தல்கள்

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில்இ சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்கள்…

Read More