மத்திய கிழக்கு யுத்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடென்ன? – ஈரானியத் தூதுவர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானைத் தாக்கிவருவது தொடர்பில் இலங்கை தனது நிலைப்பாட்டையும் கருத்தையும் தெளிவாக எடுத்துக்கூறவேண்டுமென இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் கலாநிதி அலிரெஸா டெல்க்ஹோக் தெரிவித்துள்ளார். ‘‘மத்திய கிழக்கில் சர்வதேச சட்டங்கள் மீறப்படுவது குறித்து இலங்கை மெளனம் காக்கக்கூடாது. இலங்கை ஒரு நடுநிலையான நாடு. நடு நிலைமை என்பது உலகில் முக்கிய போரின்போது அமைதிகாத்தல் என அமையக்கூடாது. அமொரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் பொதுமக்களையும் ஈரானின் உட்கட்டமைப்பு வசதிகளையும் தாக்கி வருகிறது. இலங்கை மரபுரீதியாக ஒரு…

Read More

ட்ரம்ப் ஒரு சைத்தான் – சாடுகிறார் காரியப்பர்

‘‘அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு சைத்தான். இந்த சைத்தானால்தான் உலகில் அமைதி இல்லாமல்போயுள்ளது. இந்த சைத்தான் தொடர்பில் எமது ஜனாதிபதி அநுரகுமார ஒரு வரி கூட கண்டித்துப் பேசாதமையால் அவருக்கு வாக்களித்த முஸ்லிம்கள் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றார்கள். இன்று கிரீன்லாந்தை கேட்கும் ட்ரம்ப் எனும் சைத்தான் நாளை திருகோணமலையையும் கேட்கும்’’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான…

Read More

மத்திய கிழக்கிலிருந்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக நாடு திரும்பினர் – ட்ரம்ப்

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து 9,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்காவிற்கு பாதுகாப்பாகத் திரும்பியுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அபாயங்கள் உள்ளதால் பெரும்பாலான மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  “ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதிலிருந்து 9,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மத்திய கிழக்கிலிருந்து பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். நீங்கள் மத்திய கிழக்கில் ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்து, நீங்கள் வீடு திரும்ப விரும்பினால்,…

Read More

நாட்டில் போதியளவில் எரிபொருள் இருக்கின்றது – ஜனாதிபதி தெரிவிப்பு

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலை உலகப் பொருளாதாரத்திற்கும், மனித வாழ்வின் இருப்புக்கும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில் சிறந்ததை எதிர்பார்க்கும் அதேவேளை, மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் தயாராகி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

Read More

ஈரானின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய கத்தார்! ட்ரோன்களை இடைமறித்ததாக அறிவிப்பு

ஈரானின் இரண்டு சுகோய்-24 ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் ஈரான் ஏவிய 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 5 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக கத்தார் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்கள் மற்றும் ஈரானிய பழிவாங்கல் ஆகியவற்றின் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பெரும் போர் பதற்றத்தினை அதிகரித்துள்ளது.  இந்நிவையில், கத்தார் விமானப்படை இரண்டு SU-24 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், ஈரானால் ஏவப்பட்ட ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகள்…

Read More

நாங்கள் ஈரானின் பக்கமே உள்ளோம் – நாமல்

இலங்கையின் உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் தெரிவித்துள்ளார். மறைந்த ஈரானிய தலைவர், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதில் அக்கறை செலுத்தியுள்ளார் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த ஈரானிய தலைவர் 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் எனவும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்…

Read More

நீர்த்தேக்கத்தில் மாயமான இரு மீனவர்கள் – ஒருவரின் உடல் மீட்பு

ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர நீர்த்தேகத்தில் படகு கவிழ்ந்து காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  உயிரிழந்தவர் அங்குனுகொலபெலஸ்ஸ மீன்பிடி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஆவார். கடந்த 28ஆம் திகதி காலை 9.00 மணியளவில் மேற்குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்கள் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயினர். நேற்று (01) அப் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மற்றொரு மீனவர் நீர்த்தேக்கத்தில் மிதந்து வந்த சடலத்தைக் கண்டு அதனைக் கரைக்குக் கொண்டு…

Read More

அலி கொமெய்னி மறைவு – ரவூப் ஹக்கீம் அனுதாபம்

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய மிகவும் கொடூரமான, ஒருதலைப்பட்சமான தாக்குதல் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி கொமெய்னி மற்றும் உயர்மட்ட அரச பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதிர்ச்சியூட்டும் வகையில், சர்வதேச சட்டத்தை முற்றாக மீறி, அமெரிக்கா, இஸ்ரேல் அகியவற்றால் தேவையற்ற விதத்திலும், பொறுப்பற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்டதாக விவரிக்கப்படும் இந்த தாக்குதலில் தங்கள் பெருமதிப்பிற்குரிய…

Read More

ட்ரம்பின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை – ரணில்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளா். இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்துள்ளார். “ஒரு அரசாங்கத்தை மாற்றுவதாக இருந்தால் இந்த வன்முறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது எனவும் தெரிவித்துள்ளார். ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாது….

Read More

5.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) 5.2 மில்லியன் லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ‘‘நேற்றுக் காலை மாத்திரம் 2,325,349 லீற்றர் டீசல் மற்றும் 2,904,000 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டது. 3,018,349 லீற்றர் டீசல் மற்றும் 3,920,400 லீற்றர் பெற்றோல் விநியோகித்துள்ளது. தேவை திடீரென அதிகரித்ததால் பல நிரப்பு நிலையங்களில்…

Read More