ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி மாயம்

திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ற்றில் நீராடச் சென்ற ஒரே குடு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த இவர்கள் நேற்று (14) அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Read More

ஈரான்–அமெரிக்கா பேச்சு: இரண்டாம் சுற்றுக்கு பாகிஸ்தான் முயற்சி

ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றை அடுத்த வாரம் நடத்துவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் 21ஆம் திகதியன்று முடிவடையவுள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு முன்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழலை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதிசெய்ய, பாகிஸ்தான்…

Read More

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது இத்தாலி

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். வழக்கமாக தானாகவே புதுப்பிக்கப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை, இந்த முறை புதுப்பிக்கப் போவதில்லை எனவும் போர்ச் சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலிய அரசு அறிவித்துள்ளது

Read More

ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூட ஈரான் முடிவு

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிராந்திய பதற்றம் அபாயகரமாக அதிகரித்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. அதேபோல் லெபனான் மீதான தாக்குதல் நீடித்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகவேண்டிய நிலைமை வரலாமெனவும் ஈரான் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தினுள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 300 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Read More

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பில்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (09) காலை 8 மணி முதல் 48 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. படிப்பின் பின்னரான வரையறுக்கப்பட்ட சேவை வைத்தியர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read More

வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

களுத்துறை பணிமனை அருகில் வலம்புரி சங்குடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (08) பகல் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையிலேயே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்த வலம்புரியை ரூபா 35இலட்சத்துக்கு விற்பனை செய்யத் தயாராக இருந்தமை தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் சந்தேக நபர் தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதோடு, வலம்புரி சங்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குருநாகலையைச் சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு கைதாகியுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள்…

Read More

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே செனதீர தெரிவித்துள்ளார். நேற்று (08) கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் சிறிய விபத்து ஏற்பட்டால் கூட குறித்த சாரதிகள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

எரிவாயு விலை உயர்வு – உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் விருந்தக உரிமையாளர்களின் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியன 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதேநேரம், தேங்காய் எண்ணெய் விலை குறைந்துள்ளதன் காரணமாக சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நேபாளத்தில் விமான பயண கட்டணங்கள் சடுதியாக உயர்வு

நேபாள அரசாங்கம் விமான எரிபொருள் விலையை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலையால் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகத் தடைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டின் விமான பயண கட்டணங்கள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி காத்மாண்டுவிலிருந்து இயங்கும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை 84.7 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் பொக்காரா மற்றும் பைரவா ஆகிய இடங்களிலிருந்து இயங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விலை முறையே 116.2மூ மற்றும்…

Read More

வீட்டின் சுவரில் லொறி மோதி விபத்து

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை காரியாலயத்திற்கு அருகில் இன்று (01) மாலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த லொறி நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான குப்பை அகற்றும் லொறி ஒன்று என தெரியவந்துள்ளது. இதன் போது படுகாயமடைந்த லொறியின் சாரதியும் நடத்துனர் இருவரும்  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக வீட்டு மதில்…

Read More