இந்தோனேசியாவில், எல்பிஜி கிடங்கு என சந்தேகிக்கப்படும் இடத்தில் தீ

இந்தோனேசியாவின் பெகாசி மாகாணம், முஸ்திகஜயாவில் உள்ள சிமுனிங் என்ற இடத்தில், எல்பிஜி கிடங்கு என சந்தேகிக்கப்படும் இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியதால் வெடிப்புகள் ஏற்பட்டதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின்சாரத் தடை மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் நிலவியது.  தீயணைப்புப் படையினர் இன்னும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

ன்று (02) முதல் அடுத்த சில நாட்களுக்கு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேலும் மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில்…

Read More

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்கா கடல் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிச்டர் அளவுகோலில் இது 7.4 அலகாக பதிவாகியுள்ளதாக சர்வதேச நில அதிர்வு ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவிதமான சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத்…

Read More

ஈராக்கில் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தல்: பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் பிரபல பெண் பத்திரிகையாளர் ஜெல்லி கிட்டில்சன், மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் சர்வதேச ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த போர் செய்தியாளரான ஜெல்லி கிட்டில்சன், உலகின் மிக அபாயகரமான போர் முனைகளுக்கே நேரடியாகச் சென்று துணிச்சலாகச் செய்தி சேகரிப்பதில் பெயர் பெற்றவர். தற்போது ஈராக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கள…

Read More

ஐபிஎல் கிரிக்கெட்; டில்லி – லக்னோ இன்று மோதல்

லக்னோவில் இன்று நடைபெறும் 19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், அக்சர் பட்டேல் தலைமையிலான டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப் போட்டியானது, இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Read More

மீன்பிடிப் படகிலிருந்து 300 கிலோ ஹெரோயின் பறிமுதல்

பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகிலிருந்த 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (01) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த படகானது திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது படகிலிருந்த 298 உரப் பைகளில் இப் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. படகும் அதிலிருந்த 6 சந்தேக நபர்களும் தொடர்பாடல் உபகரணங்களும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போதைப்பொருளானது,…

Read More

பங்களாதேஷ் சிறையிலிருந்த 6 இலங்கை மீனவர்கள் விடுதலை

பங்களாதேஷில் சிறையில் இருந்த 6 இலங்கை மீனவர்கள் எட்டு மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக எட்டு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதோடு நாளை (02) அவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 2025, ஜூலை 16 அன்று, ‘சுடு துவா 4’ (IMULA 0138 PTM) என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் பயணம் செய்த மீனவர் குழுவினர், கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பங்களாதேஷ் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்….

Read More

இன்று முதல் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று முதல் நாட்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான கட்டணம் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 – 60 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 45 ரூபாயாக வசூலிக்கப்படும். 61 – 90 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. 91 – 180 அலகுகள்: 7.2% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான…

Read More

GMOA – பணிப்புறக்கணிப்பு நிறைவு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவுற்றது. இது தொடர்பான மேலதிக விடயங்கள் இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என சங்க துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

Read More

க்ரைமியாவில் ரஷ்ய இராணுவ விமானம் விபத்து: 29 பேர் உயிரிழப்பு!

க்ரைமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் ‘அன்டோனோவ்-26’ (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (மார்ச் 31), மொஸ்கோ நேரப்படி மாலை 6:00 மணியளவில் க்ரைமியா பகுதியில் திட்டமிடப்பட்ட வழக்கமான பயணத்தில் இந்த விமானம் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் முடிவில், விமானம்…

Read More