எரிவாயு விலை உயர்வு – உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் விருந்தக உரிமையாளர்களின் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியன 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதேநேரம், தேங்காய் எண்ணெய் விலை குறைந்துள்ளதன் காரணமாக சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வீட்டின் சுவரில் லொறி மோதி விபத்து

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை காரியாலயத்திற்கு அருகில் இன்று (01) மாலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த லொறி நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான குப்பை அகற்றும் லொறி ஒன்று என தெரியவந்துள்ளது. இதன் போது படுகாயமடைந்த லொறியின் சாரதியும் நடத்துனர் இருவரும்  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக வீட்டு மதில்…

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

ன்று (02) முதல் அடுத்த சில நாட்களுக்கு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேலும் மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில்…

Read More

மீன்பிடிப் படகிலிருந்து 300 கிலோ ஹெரோயின் பறிமுதல்

பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகிலிருந்த 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (01) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த படகானது திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது படகிலிருந்த 298 உரப் பைகளில் இப் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. படகும் அதிலிருந்த 6 சந்தேக நபர்களும் தொடர்பாடல் உபகரணங்களும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போதைப்பொருளானது,…

Read More

பங்களாதேஷ் சிறையிலிருந்த 6 இலங்கை மீனவர்கள் விடுதலை

பங்களாதேஷில் சிறையில் இருந்த 6 இலங்கை மீனவர்கள் எட்டு மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக எட்டு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதோடு நாளை (02) அவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 2025, ஜூலை 16 அன்று, ‘சுடு துவா 4’ (IMULA 0138 PTM) என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் பயணம் செய்த மீனவர் குழுவினர், கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பங்களாதேஷ் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்….

Read More

இன்று முதல் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று முதல் நாட்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான கட்டணம் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 – 60 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 45 ரூபாயாக வசூலிக்கப்படும். 61 – 90 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. 91 – 180 அலகுகள்: 7.2% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான…

Read More

GMOA – பணிப்புறக்கணிப்பு நிறைவு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவுற்றது. இது தொடர்பான மேலதிக விடயங்கள் இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என சங்க துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனினும் இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை தொடரும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.  மேலும் மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பல இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும், அதிகாலை…

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. நாட்டிலுள்ள உள்ள 2,362 நிலையங்களில் நடைபெற்ற உயர்தர தேர்வில் மொத்தம் 340,525 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில், 246,521 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 94,004 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர். பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk இணையத்தில் காணலாம்

Read More

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும்

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதாக நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல்.பிரதீப் பியதர்ஷன பெரெரா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளர். நாட்டில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்ட தினமாக நேற்றைய தினம் பதிவதானது. நேந்றைய மின்சாரத் தேவையானது 3,089 மெகாவோட் ஆகப் பதிவாகியுள்ளது. அன்றைய தினத்திலிருந்து இன்று வரை மின்சாரத் தேவையானது தொடர்ந்து…

Read More