மூன்று தசாப்தங்களின் பின்னர் அமெரிக்கா – ஹிஸ்புல்லா பேச்சுவார்த்தை

இஸ்ரேலும் லெபனானும் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன. நேற்று (14) வொஷிங்டனின் டி.சி.யில் இடம்பெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக லெபனானும் இஸ்ரேலும் தங்களின் முதல் தூதரக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இதற்கு மத்தியஸ்தம் வகித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஹிஸ்புல்லாவின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவர இதுவொரு வரலாற்று வாய்ப்பு எனக் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கான இடமும் நேரமும் பின்ன் தீர்மானிக்கப்படும்…

Read More

நேபாளத்தில் விமான பயண கட்டணங்கள் சடுதியாக உயர்வு

நேபாள அரசாங்கம் விமான எரிபொருள் விலையை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலையால் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகத் தடைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டின் விமான பயண கட்டணங்கள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி காத்மாண்டுவிலிருந்து இயங்கும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை 84.7 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் பொக்காரா மற்றும் பைரவா ஆகிய இடங்களிலிருந்து இயங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விலை முறையே 116.2மூ மற்றும்…

Read More

இந்தோனேசியாவில், எல்பிஜி கிடங்கு என சந்தேகிக்கப்படும் இடத்தில் தீ

இந்தோனேசியாவின் பெகாசி மாகாணம், முஸ்திகஜயாவில் உள்ள சிமுனிங் என்ற இடத்தில், எல்பிஜி கிடங்கு என சந்தேகிக்கப்படும் இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியதால் வெடிப்புகள் ஏற்பட்டதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின்சாரத் தடை மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் நிலவியது.  தீயணைப்புப் படையினர் இன்னும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்கா கடல் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிச்டர் அளவுகோலில் இது 7.4 அலகாக பதிவாகியுள்ளதாக சர்வதேச நில அதிர்வு ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவிதமான சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத்…

Read More

ஈராக்கில் அமெரிக்க பெண் பத்திரிகையாளர் கடத்தல்: பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் பிரபல பெண் பத்திரிகையாளர் ஜெல்லி கிட்டில்சன், மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் சர்வதேச ஊடகத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த போர் செய்தியாளரான ஜெல்லி கிட்டில்சன், உலகின் மிக அபாயகரமான போர் முனைகளுக்கே நேரடியாகச் சென்று துணிச்சலாகச் செய்தி சேகரிப்பதில் பெயர் பெற்றவர். தற்போது ஈராக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கள…

Read More

ஐபிஎல் கிரிக்கெட்; டில்லி – லக்னோ இன்று மோதல்

லக்னோவில் இன்று நடைபெறும் 19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், அக்சர் பட்டேல் தலைமையிலான டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப் போட்டியானது, இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Read More

பங்களாதேஷ் சிறையிலிருந்த 6 இலங்கை மீனவர்கள் விடுதலை

பங்களாதேஷில் சிறையில் இருந்த 6 இலங்கை மீனவர்கள் எட்டு மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக எட்டு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதோடு நாளை (02) அவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 2025, ஜூலை 16 அன்று, ‘சுடு துவா 4’ (IMULA 0138 PTM) என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் பயணம் செய்த மீனவர் குழுவினர், கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் பங்களாதேஷ் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்….

Read More

க்ரைமியாவில் ரஷ்ய இராணுவ விமானம் விபத்து: 29 பேர் உயிரிழப்பு!

க்ரைமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் ‘அன்டோனோவ்-26’ (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (மார்ச் 31), மொஸ்கோ நேரப்படி மாலை 6:00 மணியளவில் க்ரைமியா பகுதியில் திட்டமிடப்பட்ட வழக்கமான பயணத்தில் இந்த விமானம் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் முடிவில், விமானம்…

Read More

ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளர் நியமனம்

ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு சபையின் செயலாளராக, முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ் படையின் முன்னாள் தளபதியான முகமது பாகெர் ஜோல்காதிர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இந்த நியமனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. மேலும், இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ் படையின் முக்கியத்துவத்தையும் இது உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Read More

அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள மாட்டோம் – ஈரான் ஒப்புதல்: டிரம்ப்

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல்களில் ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பிற நாடுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் அங்குள்ள எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள…

Read More