இலங்கை சார்ந்த விடயங்கள் நோர்வே பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைய இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.  இதன்போது தொடரப்படும் கேள்விகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதில் வழங்கவுள்ளார். இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு அமையவுள்ள இந்த விவாதத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்கள், நல்லாட்சிக்கான நகர்வுகள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான…

Read More

இலங்கை கிரிக்கெட் அணியை கட்டி எழுப்புவது கடினம் – முரளிதரன்

“உண்மையை உணருங்கள், உலகில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம்”  இலங்கை அணி T20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்திற்கு எதிரான முக்கியமான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. T20 உலகக் கோப்பையில் இலங்கை அணி வெற்றியின் தொடக்கத்தை எடுத்திருந்தாலும், அந்த வெற்றியின் தாளத்தை தக்கவைக்க அணி தவறியது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களில், ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். இத்தகைய சூடான…

Read More

அமெரிக்க படகின் மீது கியூபா பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு

கியூபாவின் வடக்குக் கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்க அதிவேகப் படகு மீது கரையோர பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படகில் இருந்த நால்வர் உயிரிழந்துள்ளதோடு, அறுவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  கப்பலில் இருந்தவர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

Read More

கொழும்பு மாவட்டத்தில் காணி விலை உயர்வு

கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது 10.6 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கொழும்பு மாவட்ட நிலங்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பில் இருப்பதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன. நில மதிப்பீட்டுச் சுட்டியின் அனைத்துப் பிரிவுகளிலும் இந்த அதிகரிப்பு காணப்படுவதுடன், குறிப்பாக குடியிருப்பு…

Read More

அரசாங்கத்தின் தலையீட்டை தசுன் சானக கோரியுள்ளார்

இலங்கைத் தேசிய கிரிக்கெட் அணியைச் சுற்றி நிலவும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளத் தாக்குதல்கள், வீரர்களின் மனநலத்தையும் விளையாட்டின் எதிர்காலத்தையும் பாதிப்பதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார். இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியதைத் தொடர்ந்து கருத்துத் வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தோல்விக்கான பொறுப்பை அணி ஏற்றுக்கொண்டாலும், வெளியிலிருந்து வரும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ள…

Read More

இலங்கை – பாகிஸ்தான் இடையிலான விளையாட்டு இராஜதந்திர உறவுகள் பலப்படுத்தல்

2026 ரி20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் மத்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான சையத் மொஹ்சின் ரசா நக்வி தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவினர், இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதனும் கலந்துகொண்டார். இலங்கையில் நடைபெற்ற தீர்மானமிக்க இந்தியா –…

Read More

தயாசிறி எம்.பியின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தம் – நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்துவதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைகால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த முறைப்பாடை ஆராய்ந்த பின்னரே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் செயல்படுவதில் தலையிடுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை .

Read More

பங்களாதேஷில் இன்று புதிய பிரதமர் பதவியேற்பு

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சி அமைக்கவுள்ளது. குறித்த தேர்தலில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரகுமான் இன்று (17) மாலை 4 மணிக்கு தலைநகர் டாக்காவில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தாரிக் ரகுமானுக்கு, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சகாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் பயணமாக வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சுமார்  09 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம்  அமைகிறது. இருவரும் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய…

Read More

செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்திய  பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘செயற்கை  நுண்ணறிவு  தாக்கம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து  இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது….

Read More