இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  அதேநேரம் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.  இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல்…

Read More

QR பிரச்சினைகளை தீர்க்க புதிய உதவிச் சேவை

தேசிய எரிபொருள் அனுமதி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உடனடி உதவிச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கட்டமைப்பில் பதிவு செய்யும்போது அல்லது அதைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்பச் சிக்கல்களையும் தடைகளையும் விரைவாகத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும். இதன்படி, வாகனப் பதிவின்போது ஏற்படும் எந்தவொரு சிக்கல்களுக்கும் உதவி பெற, 076 019 1919 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஊடாக…

Read More

பாராளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி அநுர விசேட உரை

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இந்தத் தகவலை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இன்று சபையில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி ஜனாதிபதியின் உரையின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சபையில் சமூகமளித்திருந்தால்,…

Read More

இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை எந்தவிதக் கட்டணமுமின்றி நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2026 பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதால், இலங்கையிலிருந்து வெளியேறத் திட்டமிட்டிருந்த பல…

Read More

அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் அசௌகரியம்

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது…

Read More

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய 3,990 ரூபாயாகும் இதன்படி, 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய 1,602 ரூபாயாகும். 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின்…

Read More

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் தீப்பந்தப் போராட்டம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினரால் இன்று இரவு கலஹா சந்திப்பகுதியில் தீப்பந்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கலஹா சந்திப்பகுதிக்கு வருகை தந்த மாணவர்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் ஒரு ஒழுங்கையை பொலிஸார் மூடியுள்ளனர். இதனால் அந்த வீதியூடான போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியாளர்கள் பல்கலைக்கழகங்களை பாலர் பாடசாலைகளாக கருதி சட்டங்களை உருவாக்கி, சுற்று…

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்.  மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம்,…

Read More

பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு- தொழிற்சங்க நடவடிக்கை காரணமா?

மின்சார சபை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் தடையை சரிசெய்ய சில மணி நேரம் எடுக்கும் என்று மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Read More

பஸ் கட்டண அதிகரிப்புக்கு கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எவ்வாறாயினும் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிரண்டா தெரிவித்துள்ளார்.

Read More