நாட்டில் போதியளவில் எரிபொருள் இருக்கின்றது – ஜனாதிபதி தெரிவிப்பு

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலை உலகப் பொருளாதாரத்திற்கும், மனித வாழ்வின் இருப்புக்கும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் என்ற வகையில் சிறந்ததை எதிர்பார்க்கும் அதேவேளை, மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் தயாராகி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

Read More

நாங்கள் ஈரானின் பக்கமே உள்ளோம் – நாமல்

இலங்கையின் உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் தெரிவித்துள்ளார். மறைந்த ஈரானிய தலைவர், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதில் அக்கறை செலுத்தியுள்ளார் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த ஈரானிய தலைவர் 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் எனவும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்…

Read More

நீர்த்தேக்கத்தில் மாயமான இரு மீனவர்கள் – ஒருவரின் உடல் மீட்பு

ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர நீர்த்தேகத்தில் படகு கவிழ்ந்து காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  உயிரிழந்தவர் அங்குனுகொலபெலஸ்ஸ மீன்பிடி பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஆவார். கடந்த 28ஆம் திகதி காலை 9.00 மணியளவில் மேற்குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்கள் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயினர். நேற்று (01) அப் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மற்றொரு மீனவர் நீர்த்தேக்கத்தில் மிதந்து வந்த சடலத்தைக் கண்டு அதனைக் கரைக்குக் கொண்டு…

Read More

அலி கொமெய்னி மறைவு – ரவூப் ஹக்கீம் அனுதாபம்

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய மிகவும் கொடூரமான, ஒருதலைப்பட்சமான தாக்குதல் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லாஹ் அலி கொமெய்னி மற்றும் உயர்மட்ட அரச பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதிர்ச்சியூட்டும் வகையில், சர்வதேச சட்டத்தை முற்றாக மீறி, அமெரிக்கா, இஸ்ரேல் அகியவற்றால் தேவையற்ற விதத்திலும், பொறுப்பற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்டதாக விவரிக்கப்படும் இந்த தாக்குதலில் தங்கள் பெருமதிப்பிற்குரிய…

Read More

ட்ரம்பின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை – ரணில்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளா். இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்துள்ளார். “ஒரு அரசாங்கத்தை மாற்றுவதாக இருந்தால் இந்த வன்முறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது எனவும் தெரிவித்துள்ளார். ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் பெரிய தட்டுப்பாடு ஏற்படாது….

Read More

5.2 மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) 5.2 மில்லியன் லீற்றருக்கும் அதிகமான எரிபொருள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ‘‘நேற்றுக் காலை மாத்திரம் 2,325,349 லீற்றர் டீசல் மற்றும் 2,904,000 லீற்றர் பெற்றோல் வழங்கப்பட்டது. 3,018,349 லீற்றர் டீசல் மற்றும் 3,920,400 லீற்றர் பெற்றோல் விநியோகித்துள்ளது. தேவை திடீரென அதிகரித்ததால் பல நிரப்பு நிலையங்களில்…

Read More

மின்னேரியாவில் பஸ் விபத்து – 10 பேர் காயம்

ஹபரணை – பொலன்னறுவை வீதி, மின்னேரியா பகுதியில் பேருந்தொன்றும் உழவு இயந்திரமொன்றும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த பேருந்தானது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதோடு, உழவு இயந்திரமானது, அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்றபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Read More

அக்குரேகொட இரட்டைக்கொலை! துப்பாக்கிதாரியின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கும் சந்தேகநபர்கள்

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி  மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கு தங்குமிடம் வழங்கிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மெதகம, நன்னபுராவ – திவியப்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து மொனராகலை பொலிஸாரால் சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரியை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்திய…

Read More

கிளினிக் செயற்பாடுகளில் இருந்து விலகும் வைத்தியர்கள்…

 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 2) முதல் வைத்தியசாலைகளில் கிளினிக் நடவடிக்கைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. வைத்தியர்களுக்கான சிறப்பு சேவையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்காததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இயங்கும் 50 கிளினிக்குகளும், நடமாடும் கிளினிக் அமைப்பும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டில் ஆரம்ப…

Read More

இலங்கை மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தவணைகள் மற்றும் வட்டி விகிதங்களை 2028 முதல் செலுத்த இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவற்றை எந்த தடையும் இல்லாமல் திருப்பிச் செலுத்துவதற்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார். 2028 முதல் இலங்கை ஆண்டுதோறும் மூன்றரை முதல் நான்கு (3.5) பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கடன்கள் மற்றும் தவணைகளை செலுத்த வேண்டியுள்ளது. 2028 முதல் 2031…

Read More