அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர் அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு…
ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூட ஈரான் முடிவு
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிராந்திய பதற்றம் அபாயகரமாக அதிகரித்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. அதேபோல் லெபனான் மீதான தாக்குதல் நீடித்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகவேண்டிய நிலைமை வரலாமெனவும் ஈரான் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தினுள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 300 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பில்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (09) காலை 8 மணி முதல் 48 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. படிப்பின் பின்னரான வரையறுக்கப்பட்ட சேவை வைத்தியர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வலம்புரி சங்குடன் ஒருவர் கைது
களுத்துறை பணிமனை அருகில் வலம்புரி சங்குடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (08) பகல் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையிலேயே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்த வலம்புரியை ரூபா 35இலட்சத்துக்கு விற்பனை செய்யத் தயாராக இருந்தமை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சந்தேக நபர் தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதோடு, வலம்புரி சங்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குருநாகலையைச் சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு கைதாகியுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள்…
பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே செனதீர தெரிவித்துள்ளார். நேற்று (08) கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் சிறிய விபத்து ஏற்பட்டால் கூட குறித்த சாரதிகள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை உயர்வு – உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் விருந்தக உரிமையாளர்களின் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி ரைஸ், கொத்து மற்றும் உணவு பொதி ஆகியன 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அதேநேரம், தேங்காய் எண்ணெய் விலை குறைந்துள்ளதன் காரணமாக சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் விமான பயண கட்டணங்கள் சடுதியாக உயர்வு
நேபாள அரசாங்கம் விமான எரிபொருள் விலையை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலையால் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகத் தடைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டின் விமான பயண கட்டணங்கள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி காத்மாண்டுவிலிருந்து இயங்கும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை 84.7 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் பொக்காரா மற்றும் பைரவா ஆகிய இடங்களிலிருந்து இயங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விலை முறையே 116.2மூ மற்றும்…
வீட்டின் சுவரில் லொறி மோதி விபத்து
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை காரியாலயத்திற்கு அருகில் இன்று (01) மாலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த லொறி நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான குப்பை அகற்றும் லொறி ஒன்று என தெரியவந்துள்ளது. இதன் போது படுகாயமடைந்த லொறியின் சாரதியும் நடத்துனர் இருவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக வீட்டு மதில்…
இந்தோனேசியாவில், எல்பிஜி கிடங்கு என சந்தேகிக்கப்படும் இடத்தில் தீ
இந்தோனேசியாவின் பெகாசி மாகாணம், முஸ்திகஜயாவில் உள்ள சிமுனிங் என்ற இடத்தில், எல்பிஜி கிடங்கு என சந்தேகிக்கப்படும் இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியதால் வெடிப்புகள் ஏற்பட்டதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின்சாரத் தடை மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் நிலவியது. தீயணைப்புப் படையினர் இன்னும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
ன்று (02) முதல் அடுத்த சில நாட்களுக்கு, இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு, மத்திய, சபரகமுவ, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில்…
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்கா கடல் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிச்டர் அளவுகோலில் இது 7.4 அலகாக பதிவாகியுள்ளதாக சர்வதேச நில அதிர்வு ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவிதமான சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத்…



