Latest posts

All

அமெரிக்க செனட் சபையில் ஈரான் விவகார தீர்மானம் தோற்கடிப்பு

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க…

வெளிநாடு

அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் 01
02
தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்
03
வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவி – இத்தாலி பிரதமர்
04
அஜர்பைஜான் மீது ட்ரோன் தாக்குதல்

சினிமா

அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்
வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவி – இத்தாலி பிரதமர்
அஜர்பைஜான் மீது ட்ரோன் தாக்குதல்

உள்நாடு

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது.  இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர் அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு…

Read More

அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான் போர்க் கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​கியதற்கு பதிலடி​யாக, வளை​குடா பகு​தி​யில் அமெரிக்க எண்​ணெய் கப்​பல் மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​ய​தாக ஈரான் கூறி​யுள்​ளது. ஈரான் கடற்படையின் 17 போர் கப்​பலை அழித்​து​விட்​ட​தாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்​தி​யா​வில் கூட்​டுப் பயிற்​சியை முடித்து விட்டு ஈரான் திரும்​பிய ஐஆர்​ஐஎஸ் டேனா என்ற போர்க்​கப்​பலை, இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்கி கப்​பல் மார்க்​-48 என்ற சக்​தி​வாய்ந்த டார்​பிடோ குண்டு மூலம் நேற்று முன்​தினம் தகர்த்​தது. இதில்…

Read More

தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்

தஜிகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிச்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.  135 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.35 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.98 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 12.07 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.  தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்…

Read More

வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவி – இத்தாலி பிரதமர்

வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்கவுள்ளதாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கொமெய்னி, முக்கிய அதிகாரிகள் உள்பட 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளின் மீது ஈரான் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது….

Read More

அஜர்பைஜான் மீது ட்ரோன் தாக்குதல்

அஜர்பைஜான் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.  பாடசாலை, விமான நிலையம் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.  ஈரானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் அஜர்பைஜானின் நக்சிவன் என்ற பகுதியில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் இஸ்லாமிய குடியரசு தெளிவுபடுத்தி, விளக்கமளிக்க வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அஜர்பைஜான் வெளியுறவு…

Read More

ட்ரம்ப் விதித்த வரி – வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்ற உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரியை உலக நாடுகளுக்கே வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வரிவிதிப்பின்படி, அமெரிக்காவுக்கு உலக நாடுகள் செலுத்திய வரியை வட்டியுடன் செலுத்துமாறு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவினால், உலக நாடுகளுக்கு 130 பில்லியன் டொலர் கட்டணத்தை அமெரிக்கா செலுத்த வேண்டியுள்ளது. அமெரிக்காவில் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாவதாகவும், வர்த்தகப் பற்றாக்குறைக் கையாளும் நோக்கில் என்றுகூறி, உலக நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி…

Read More

ஈரானியப் படைகள் உடனடியாக சரணடைய வேண்டும்: ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), அந்நாட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் உடனடியாகத் தங்களது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவ்வாறு சரணடையும் பட்சத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும், அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் நிச்சயம் மரணத்தைச் சந்திக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:…

Read More

ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி

ரஷ்யாவிடமிருந்து இந்தியா 30 நாள்களுக்கு மசகு எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த போரால் உலகளவில் மசகு எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைக்கும்வகையில் ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அதுவும் அடுத்த 30 நாள்கள் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய்…

Read More

அமெரிக்க செனட் சபையில் ஈரான் விவகார தீர்மானம் தோற்கடிப்பு

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் முன்அனுமதி இன்றி ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடுப்பதே இந்த தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும். எனினும், செனட் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில்: செனட் சபைக்கு ஆதரவாக 47 வாக்குகளும் எதிராக 53 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததால் இத்தீர்மானம் தோல்வியடைந்தது. அமெரிக்க செனட் சபையில் இந்தத் தீர்மானம் தோல்வியடைந்ததைத்…

Read More

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு: ஈரானின் 17 போர்க் கப்பல்கள் அழிப்பு

 ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ இராணுவ நடவடிக்ககையில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால், அதன் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் திகதி போர் தொடுத்தன. பதில் தாக்குதலில் இறங்கிய ஈரான், அமெரிக்க இராணுவ முகாம்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதால் மத்திய கிழக்கில்…

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Read More