அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர் அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு…
பல்கேரிய பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அமோக வெற்றி
ரஷ்ய ஆதரவு கொள்கை கொண்ட பல்கேரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரூமென் ரதேவ், பல்கேரிய பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். திங்களன்று வெளியான அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி இந்த வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வெற்றியின் ஊடாக பல்கேரியாவில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வெற்றியின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் அங்கம் வகிக்கும் பல்கேரியா மீண்டும் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவைப் பேணவழிவகை செய்யும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். கருத்துக்…
ஈரானுடான போர் நிறுத்தத்தை மேலும் நீடித்தார் ட்ரம்ப்
ஈரான் மீதான இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரானியத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த முன்மொழிவை முன்வைக்கும் வரை காத்திருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத்…
இலங்கையின் மறுசீரமைப்பு பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் நிதியுதவி
டிட்வா சூறாவளியினால் இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், கடினமான இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தருணத்தில், பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும்…
அஸ்வெசும முதியோருக்கான கொடுப்பனவு இன்று வைப்பீடு
அஸ்வெசும நலத்திட்டத்தின் முதியோருக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 617,406 பயனாளர்களுக்கு மொத்தமாக 3.087 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 72,525 பயனாளர்களுக்கு 362.6 மில்லியன் ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. பயனாளர்கள் தங்களது வங்கி கிளைகளுக்குச் சென்று இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்….
அமைதிக்கான நடை பயணம் தம்புள்ளையில் ஆரம்பம்
ர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘அமைதிக்கான நடை பயணம்’ அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. இன்று காலை 6.30க்கு இந்த அமைதி நடை பயணம் ஆரம்பமானது. கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை, 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்களாக 200க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அமைதிக்காக மேற்கொண்ட நடை பயணம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அந்தப்…
ஈரான் உள்ளூர் விமான சேவைகள் நாளை ஆரம்பம்
மோதல் காரணமாக கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகள் நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஈரான் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது. தெஹ்ரான் மற்றும் மஷாத் ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையே முதலில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அதே நாளிலேயே அங்கிருந்து திரும்பும் விமானச் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. பிராந்தியத்தில் நிலவிய போர் பதற்றம் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த விமான சேவைகள் கடந்த 50 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
உத்தரவிட்டால் தாக்குதல் தொடங்கும் – ட்ரம்ப்
போர்நிறுத்தம் தொடர்பில் ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இருவார கால போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் தனது தளவாடங்களை புதுப்பித்துக்கொண்டுள்ளது. எங்களிடம் போதுமான அளவு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த இடைவெளியில் அவற்றை மேலும் வலுப்படுத்திக்கொண்டோம். தற்போது அமெரிக்க இராணுவம் தாக்குதல்களுக்கு முழுத் தயாராக உள்ளது. நான் உத்தரவு கொடுத்தால் மீண்டும் தாக்குதல் தொடரும்”…
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது
இந்தியா -தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கி உள்ளது. முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 31-ஆம் திகதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார்….
ஜனாதிபதி டிரம்ப் ஆட்சியில் தொடர்ந்து நீக்கப்படும் பெண் உயர் அதிகாரிகள்.. தொழிலாளர் துறைச் செயலாளர் பதவி நீக்கப்படுகின்றார்.
அமெரிக்காவின் தொழிலாளர் துறைச் செயலாளரான Lori Chavez-DeRemer பதவி விலகியுள்ளார். அமெரிக்காவில் உயர்பதவி வகித்த பெண் அலுவர்களுள் Kristi Noem, Pam Bondi என்ற இருவரையும் தொடர்ந்து வெளியேறும் மூன்றாவது பெண் உயர் அலுவலர் இவராவார். முதல் இருவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. லோரி சாவெஸ்-டெரெமர், தன் பதவியில் இருந்து விலக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.மார்ச் மாதத்தில் மின்னசோட்டாவில் நடைபெற்ற குடியேற்றத் துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட போராட்டங்களில் இரண்டு பேர் உயிரிழந்திருந்திருந்தனர்….
தெற்கு லெபனானில் சிலுவை சேதம் – இராணுவ வீரரின் செயலுக்கு உலகளாவிய கண்டனம்!
தெற்கு லெபனானில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ கிராமமான டெபெலில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், டெபெல் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் வீரர் ஒருவர், அங்கிருந்த சிலுவையைச் சேதப்படுத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தப் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகள் தங்கள் கண்டனங்களைப்…



