Latest posts

All

கொழும்பின் சில பகுதிகளில் இன்று போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் – பொலிஸ்

அமைதிக்கான நடைபயணம் இன்று கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறுவதால் விசேட போக்குவரத்து திட்டம்…

வெளிநாடு

ஈரானின் முன்மொழிவு – ட்ரம்ப் அதிருப்தி 01
02
வடக்கு காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஐவர் பலி
03
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நீடிப்பு – ட்ரம்ப்
04
அமெரிக்க கடற்படை செயலாளர் விலகல்

சினிமா

இப்பலோகமவில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு
ஈரானின் முன்மொழிவு – ட்ரம்ப் அதிருப்தி
அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்று
மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு – இரு அதிகாரிகள் கைது

உள்நாடு

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது.  இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர் அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு…

Read More

இப்பலோகமவில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

அனுராதபுரம் – இப்பலோகமவில் மின்னல் தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (27) பிற்பகல் பலத்த மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. தமது விவசாய நிலங்களில் நிலத்தை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.  விஜிதபுர பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஈரானின் முன்மொழிவு – ட்ரம்ப் அதிருப்தி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் தொடர்பில் ஈரானின் புதிய முன்மொழிவை வெள்ளை மாளிகை பரிசீலனைக்கு எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இருப்பினும் அணுசக்தி தொடர்பில் கவனம் செலுத்தாதால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்று

சர்வதேச அமைதிக்கான நடைபயணம் இன்றுடன் நிறைவுறுகிறது. இன்று (28) நண்பகல் 12.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் நடைபயணம் ஆரம்பமாகி சுதந்திர சதுக்கத்தை அடையம். பின்னர் மாலை 4.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் விசேட அரச விழா நடைபெறவுள்ளது. தொடர்ந்து சுதந்திர சதுக்கத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம் கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவு பெறவுள்ளது.

Read More

மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு – இரு அதிகாரிகள் கைது

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஜெயிலர் ஒருவரும் பெண் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (27) இரண்டு கைதிகள் சிறை அறைகளை விட்டு வெளியேறி தப்பிச்செல்ல முற்பட்டபோது அதனைத் தடுக்க சிறைக் காவலர் ஒருவர் முயற்சித்துள்ளார். இதன்போது நடந்த சம்பவத்தில் இரு கைதிகளும் சிறை அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 38 வயதான கைதியே இவ்வாறு…

Read More

கொழும்பின் சில பகுதிகளில் இன்று போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் – பொலிஸ்

அமைதிக்கான நடைபயணம் இன்று கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறுவதால் விசேட போக்குவரத்து திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இன்று (28) காலை 11.00 மணி முதல் கீழ்கண்ட வீதிகளில் அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும். பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர…

Read More

போதைப்பொருள் பயன்படுத்திய நவாஸ் மீது பாக். சபை விசாரணை

பாகிஸ்தான் சகலதுறை வீரர் முகமது நவாஸ் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணையை ஆரம்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தின்போதும் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட ஊக்கமருந்து சோதனையிலேயே அவர், போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.), பாக். கிரிக்கெட் சபைக்கு அறிவித்ததை அடுத்தே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதை பாக். கிரிக்கெட் சபை பேச்சாளர்…

Read More

வடக்கு காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஐவர் பலி

வடக்கு காசாவில் பொதுமக்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு காசாவின் பெய்ட் லஹியாவில் உள்ள அல்-கஸ்ஸாம் மசூதிக்கு அருகே பொதுமக்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அத்தாக்குதலிலேயே இவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கையில் அதனை மீறும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள காசா அரசாங்க ஊடக அலுவலகம்…

Read More

2026 A/L பரீட்சை விண்ணப்பங்களுக்கான காலவகாசம் இன்றுடன் நிறைவு

– கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் திட்டவட்டம் 2026 ஆம் ஆண்டுக்கான A/L பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் A/L பரீட்சைக்கான விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதியானது எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம்…

Read More

சிங்களம், தமிழ்மொழி கற்கையை

பணிகளில் பிரயோகிக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை கற்ற அரச ஊழியர்கள் அக்கற்கையை பணிகளில் பயன்படுத்துவதற்குரிய இலக்குகளை அடைவதை உறுதி செய்யும் வகையில் ஒரு செயல் பொறிமுறையை மேற்கொள்வதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவுத்தியுள்ளார். தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மொழிகளைக் கற்கும் அரச ஊழியர்களின்…

Read More

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் போக்குவரத்து பாதிப்பு

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது.  வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதனால் கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Read More