அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர் அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு…
அமெரிக்க விமானம் ஈராக் வான்பரப்பில் வீழ்ந்தது!
அமெரிக்க விமானப்படை KC-135 ஸ்ட்ராடோடேங்கர், மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க மத்திய கட்டளை நிலையம் அறிவித்துள்ளது. “ஒபரேஷன் எபிக் ஃப்யூரியின் போது நட்பு வான்வெளியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று CENTCOM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “வானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இரண்டு விமானங்கள் சேவையில் ஈடுபட்டன. ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானது.இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது…
ஜோன்ஸ் சட்டத்தை தளர்த்த ட்ரம்ப் தீர்மானம்
அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையே சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டதாகவும், அமெரிக்கக் கொடியுடன், அந்நாட்டு ஊழியர்களால் இயக்கப்படுபவையாகவும் இருக்க வேண்டும் என்ற ஜோன்ஸ் சட்டத்தை தற்காலிகமாக தளர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இந்தச் சட்டத்தை 30 நாட்களுக்கு தளர்த்துவதன் மூலம், வெளிநாட்டு கொடி ஏந்திய எரிபொருள் தாங்கி கப்பல்கள் அமெரிக்காவின் வளைகுடாப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஈரான் போர் காரணமாக…
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி விளக்கமறியலில்
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, லாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார். இதன்போது, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
போர் எப்போது முடியும் என்பதை ஜூலி சங்கிடமே அரசாங்கம் வினவ வேண்டும்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரை நிறைவுறுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடமே வினவ வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஆட்சிக்கு கொண்டு வர ஜூலி சங் பாடுபட்டதால், போர் எப்போது முடியும் என்பதை அவரிடமே வினவ…
சிசு செரிய சேவையை விரிவுப்படுத்த திட்டம்
இந்த ஆண்டு சிசு செரிய சேவையில் புதிதாக 200க்கும் மேற்பட்ட பேருந்துகளை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். இசுருபாய வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பாடசாலை சிறுவர்களின் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுகள் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய…
டிட்வா தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் பெறப்பட்டன
டிட்வா சூறாவளியின் அரசின் தொடர் நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறும் நிகழ்வு நுவரெலியா நகரின் மையப்பகுதியில் இன்று நடைபெற்றது. சூழலியல் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக, டிட்வா மீளாய்வு என்ற தலைப்பின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது, டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்று, ஒரு திட்டத்தைத் தயாரித்து இதில் இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து அதற்கான…
வீட்டு பணியாளர்கள் தொடர்பான பொலிசாரின் அவசர வேண்டுகோள்
நாட்டில், வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அண்மையகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள், அந்த வீடுகளில் உள்ள தங்க நகைகள், பணம், வெளிநாட்டு நாணயம் மற்றும் ஏனைய பெறுமதியான சொத்துக்களைத் திருடிச் செல்வதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. முகவர் நிலையங்கள் அல்லது இடைத்தரகர்கள் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ பணிக்கமர்த்தப்படுபவர்களே இவ்வாறான திருட்டுச்…
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா?
இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற பதத்துக்கு மேலதிகமாக இலங்கைத் தமிழர்கள் எனும் பதத்தையும் உள்வாங்குவதன் ஊடாக, இந்த விடயத்தினை ஆராய்வதாகவும் புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தின்படி இலங்கையில் இருந்த குறித்த எண்ணிக்கையான இந்திய…
எத்தியோப்பியாவில் மண்சரிவு – 50 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா, கம்பா மற்றும் போன்கே ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒருவர் மட்டுமே மண்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், இந்த மண்சரிவுகளில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 125 பேர்…
இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கையில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை எந்தவிதக் கட்டணமுமின்றி நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2026 பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதால், இலங்கையிலிருந்து வெளியேறத் திட்டமிட்டிருந்த பல…



