சீகிரியாவில் காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!

சீகிரியா – பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த 68 மதிக்கத்தக்க சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த வெளிநாட்டுப் பயணி தனது மனைவியுடன் சீகிரியா, பிதுரங்கல வீதியில் பாதசாரியாகச் சென்று கொண்டிருந்த போதே, திடீரென அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவரின்…

Read More

இலங்கையை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவப் பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (16) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்தனர். தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதிநிதிகள் குழுவை வரவேற்றார். டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களையும் அதன் தாக்கத்தையும் நேரடியாகப் பார்வையிடும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப்…

Read More

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் வருகை இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துகின்றன- ஜனாதிபதி

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் இலங்கை வருகை என்பன இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் Syed Mohsin Raza Naqvi, வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள அபிவிருத்திக்கான அமைச்சர் chaudhry Salik Hussain ஆகியோர் உள்ளிட்ட தூதுக்குழுவுடனான சந்திப்பு இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

Read More

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக, நீர்கொழும்பு களப்புப் பகுதியை அபிவிருத்தி செய்யும் புதிய திட்டமொன்று நாளை (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புதிய படகு இறங்குதுறை மற்றும் படகு செலுத்தும் தளம் என்பன அமைக்கப்படவுள்ளன. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  பிரதி அமைச்சர் ரத்ன கமகே…

Read More

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது.  இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர் அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு…

Read More